ஆப்நகரம்

சாலையில் சென்ற காரில் திடீர் தீ… தந்தை, மகளுக்கு என்ன ஆனது?

புதுச்சேரியில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Oct 2021, 11:13 pm

ஹைலைட்ஸ்:

  • சாலையில் சென்ற சொகுசு காரில் திடீர் தீ விபத்து
  • தந்தை, மகள் உயிர் தப்பினர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
புதுச்சேரி நாவற்குளம் ரத்தினவேல் நகரை சேர்ந்தவர் குல். காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் கடைக்கு செல்வதற்காக தனது உறவினருக்கு சொந்தமான காரை வாங்கிக்கொண்டு இன்று பிற்பகலில், தனது மகளுடன் லாஸ்பேட்டைக்கு சென்றார்.
நாவற்குளம் அரசு ஆரம்பப்பள்ளி, மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குல், காரை உடனடியாக சாலையோரத்தில் நிறுத்தி இறங்கினார். மேலும் தனது மகளையும் காரை விட்டு இறங்க வலியுறுத்தினார்.

இருவரும் இறங்கிய சிறிது நேரத்தில் காரி முன்பதியில் தீப்பற்றி மளமளவென கார் முழுவதும் பரவியுள்ளது.சம்பவம் குறித்து அறிந்த கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரர்காள் நிகழ்விடத்திற்கு சென்று அரை மணிநேரம் போராடி தீயணை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
மாநிலத்திற்குள் நுழைய சீமானுக்கு காவல்துறை தடை..?

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த லாஸ்பேட்டை காவல்நிலைய போலீசார் தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தீ விபத்து ஏற்பட்டவுடன் குல் தனது மகளுடன் காரை விட்டு இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அடுத்த செய்தி