ஆப்நகரம்

நான் போலீஸ் இல்ல, பொறுக்கி.. குடிபோதையில் தமிழக போலீஸ்காரர் புதுச்சேரி காவல் நிலையத்தில் அட்ராசிட்டி.. வைரலாகும் வீடியோ..!

நானும் போலீஸ்காரன் தான், என்னை ஒன்னும் பன்னமுடியாது என கூறி போதையில் புதுச்சேரி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட தமிழக போலீஸ்காரரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது‌.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 24 Mar 2023, 1:18 pm

ஹைலைட்ஸ்:

  • நானும் போலீஸ்காரர் தான், என்னை ஒன்னும் பன்னமுடியாது
  • போதையில் புதுச்சேரி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட தமிழக போலீஸ்
  • சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil குடிபோதையில் தமிழக போலீஸ்காரர் புதுச்சேரி காவல் நிலையத்தில் அட்ராசிட்டி
நானும் போலீஸ்காரன் தான், என்னை ஒன்னும் பன்னமுடியாது என கூறி போதையில் புதுச்சேரி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட தமிழக போலீஸ்காரரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது‌.
என் மீது எந்த வழக்கு வேனாலும் போடுங்க. ஆனால் நான் உங்கள் மீது வெடிகுண்டு வீசுவேன் என போதையில் மிரட்டிய காவலரால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிபோதையில் தமிழக போலீஸ்காரர் புதுச்சேரி காவல் நிலையத்தில் அட்ராசிட்டி:

புதுச்சேரி கிருமாம்பாக்கம் போலீஸ் ஏட்டு பிரீமியர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி எல்லையான கன்னி கோயில் நான்கு முனை சந்திப்பு பகுதியில் குடிபோதையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.


அங்கு சென்ற ஏட்டு ரமேஷ் மற்றும் போலீசார் அந்த நபருக்கு வாட்டர் பாட்டில் வாங்கி கொடுத்து குடிக்க செய்தனர். தண்ணீரை குடித்த அவர் போலீசாரை பார்த்து ஆபாசமாக திட்டி திடீரென தாக்குதல் நடத்தினார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த நிலையில் அவன் குடிபோதையில் இருப்பதை அறிந்த போலீசார் அவனை சமாதானம் செய்து அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அந்த நபர் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி உள்ளான். போலீசார் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அவனை பிடித்துக்கொண்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

நானும் போலீஸ்காரன் தான் என்னை ஒன்னும் செய்ய முடியாது என கூறி ஒரு கட்டத்தில் அவன் போலீசாரை ஆபாசமாக திட்டி மீண்டும் தாக்கி காவல் நிலையத்திற்கு உள்ளேயே கட்டி புரண்டு சண்டையிட்டுள்ளான். என் மீது தடா புடா இதில் வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள் ஆனால் உங்கள் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவேன் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளான்.

அப்போது ஒரு கட்டத்தில் திடீரென அந்த நபர் காவல் நிலையத்தில் உள்ளே இருந்து எழுந்து வெளியே ஓடி வந்து மதில் ஏறி குதிச்சு சாலையில் தப்பி ஓடினான். ஆனால் போலீசார அவனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை மீண்டும் காவல் நிலையம் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

துவங்கியது இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு: உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை!

விசாரணையில் கடலூர் அடுத்துள்ள கீழ்பூவானிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன், வயது 38 என்பதும், இவர் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இந்த போதை காவலரின் அட்டகாசம் குறித்து தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்கள் அங்கு சென்றனர்.

அப்போது பத்திரிக்கையாளர்களையும் ஆபாசமாக திட்டிய அந்த நபர், அவர்களையும் தாக்கி மிரட்டினான். போலீசார் அவனை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் போதை காவலர், புதுச்சேரி காவலர்களை திட்டி, காவல் நிலையத்தில் செய்த அட்டகாசங்கள் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது .
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி