ஆப்நகரம்

மீண்டும் வந்தாச்சு சத்துணவு: ஸ்பூனில் சாப்பிட்டு தமிழிசை சரி பார்ப்பு!

புதுச்சேரியில் ஓராண்டுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மீண்டும் மதிய உணவுத் திட்டம் தொடக்கம். துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு செய்து பள்ளியிலேயே மதிய உணவைச் சாப்பிட்டார்.

Samayam Tamil 2 Mar 2021, 11:02 pm
புதுச்சேரியில் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா பொது முடக்கத்தால், அரசுப் பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்த மதிய உணவு நிறுத்தப்பட்டது.
Samayam Tamil மீண்டும் வந்தாச்சு சத்துணவு: ஸ்பூனில் சாப்பிட்டு தமிழிசை சரி பார்ப்பு!


இதனையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளில் மதிய உணவு வழங்கத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி இன்று முதல் அரசுப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதனைத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமௌலி, மகேஸ்வரி ஆகியோருடன் நேரில் சென்று கிராமப்பகுதியில் உள்ள கலிதீர்த்தாள்குப்பம் அரசு மேனிலைப்பள்ளி மற்றும் சிறுவர் பள்ளியில் மதிய உணவு வழங்குவதைப் பார்வையிட்டார்.

என். ஆரை விட்டா புதுச்சேரிக்கு ஆளே இல்லையாம்: மதுரையில் பன்னீர்செல்வம்!

அப்போது மதிய உணவை வாங்கி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சாப்பிட்டுப் பார்த்து தரத்தையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பள்ளிகளில் கொடுக்கப்பட்டு வரும் உணவுப் பொருள்களின் தரத்தைக் கேட்டறிந்த அவர் மாணவர்களுக்குத் தரமான உணவைத் தயாரித்துக் கொடுக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

அடுத்த செய்தி