ஆப்நகரம்

மெஜாரிட்டி இழிந்த புதுச்சேரி அரசு: ஆட்சியைக் கவிழ்க்க அதிமுக திட்டம்!

புதுச்சேரி சட்டமன்ற படிகளில் அமர்ந்தபடி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவின் போராட்டத்தின் வழியாகக் காங்கிரஸ் அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர்.

Samayam Tamil 18 Jan 2021, 1:19 pm
புதுச்சேரியில் இன்று காலை கூடிய சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்திற்குச் செல்லாமல் மெஜாரிட்டியை இழந்த காங்கிரஸ் கூட்டணி அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்.
Samayam Tamil மெஜாரிட்டி இழிந்த புதுச்சேரி அரசு: ஆட்சியைக் கவிழ்க்க அதிமுக திட்டம்!
மெஜாரிட்டி இழிந்த புதுச்சேரி அரசு: ஆட்சியைக் கவிழ்க்க அதிமுக திட்டம்!


புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை 10.15 மணியளவில் தொடங்கியது. பேரவை தொடங்கியதும். பேரவைக்குள் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றனர்.

அப்போது சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்பு பேரவைக்கு வந்த அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் கூட்டணி அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மெஜாரிட்டியை இழந்த காங்கிரஸ் அரசு வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரக்கூடாது என்பதை வலியுறுத்திக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எம்ஜிஆர் பிரியர் ஆண்டு தவறாமல் செய்யும் சிறப்பு நெகிழ வைக்கிறது!

பின்னர் பேரவை தொடங்கியது. இதில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகளான என் ஆர் காங்கிரஸ், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையைப் புறக்கணித்தனர்.

பேரவை கூடியவுடன் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும், புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் சந்திராவதி, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஜோசப் மரியதாஸ், முன்னாள் அமைச்சர் ஏழுமலை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம். ஏ. எஸ் சுப்ரமணியன், அண்ணாமலை, பாலன் மற்றும் தமிழக எம்பி வசந்தகுமார், பாடகர் எஸ். பி பாலசுப்ரமணியன் ஆகியோரின் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட பேரவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த செய்தி