ஆப்நகரம்

24 மணி நேரத்தில் இத்தனை பலியா?; அதிகாரிகள் அதிர்ச்சி!

24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 22 Apr 2021, 4:54 pm
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் 4,675 பேருக்கு பரிசோதனை செய்ததில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 837 நபர்கள், காரைக்காலில் 89 நபர்கள், ஏனாமில் 40 நபர்கள், மாஹேவில் 21 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil புதுச்சேரி யூனியன் பிரதேசம்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம்.


யானை வரும் பின்னே....ஆடு அலறும் முன்னே....தொழிலாளி கதி?

தற்போது 5,923 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 43,931 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 4 பேரும் , காரைக்காலில் ஒருவர் என 5 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 727 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி