ஆப்நகரம்

முதல்வர் பதவி கேட்கும் பாஜக?; தர்மயுத்தம் முடிவில் ரங்கசாமி!

புதுச்சேரி முதல்வர் பதவியை பாஜக கேட்டு வருவதாக தகவல் பரவி வருகிறது.

Samayam Tamil 4 May 2021, 8:55 am
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளையும், பாஜக 6 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன.
Samayam Tamil ரங்கசாமி
ரங்கசாமி


இந்நிலையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி நேற்று மாலை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார். அவருடன் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் பாஜக வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 6 பேர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏன் திடீர் ஊரடங்கு அறிவிப்பு? ஸ்டாலின் காட்டிய க்ரீன் சிக்னல்!

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க என்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி உரிமை கோரி கடிதம் அளித்துள்ளார். என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 10 வேட்பாளர்களும், பாஜக சார்பில் வெற்றி பெற்ற 6 வேட்பாளர்கள் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்துள்ளனர். எந்த தேதியில் அவர்கள் பதவி ஏற்க விரும்புகிறார்களோ அப்போது நேரம் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே புதுச்சேரியில் முதல்வர் பதவியை பாஜகவுக்கு தருமாறு ரங்கசாமியிடம் டெல்லி மேலிடம் வலியுறுத்தி வருவதாகவும், அதற்கு ரங்கசாமி மறுத்து வருவதாகவும் தகவல் பரவி வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதுகுறித்து புதுச்சேரி அரசியல் ஆர்வலர்கள் கூறியதாவது:

கமல் தோற்ற கோவை தெற்கில் மறுவாக்கு எண்ணிக்கை?

புதுச்சேரியில் சற்று இடைவெளிக்கு பிறகு அரசியல் களம் மீண்டும் உஷ்ணம் அடைந்துள்ளது. ரங்கசாமி தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்கு ரொம்பவே ஆட்டம் காட்டினார். இதனால் ரங்கசாமிக்கு பாஜக கொஞ்சம் ஆட்டம் காட்டும் என தெரிகிறது. பதவி ஏற்ற பிறகு தான் முதலமைச்சர் ஆவது ரங்கசாமியா? அல்லது வேறு யாராவதா? என்று தெரியவரும்.

ஒருவேளை முதல்வர் பதவியை ரங்கசாமிக்கு தருவதற்கு பாஜக விரும்பாத பட்சத்தில் அப்பா பைத்தியம் சாமி கோவிலில் ரங்கசாமி தர்மயுத்தம் நடத்தி மக்களிடம் நியாயம் கேட்டாலும் ஆச்சரியம் இல்லை. இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி