ஆப்நகரம்

பாஜ எம்எல்ஏ வேட்பு மனு தாக்கல்; சபாநாயகர் தேர்தலில் போட்டியா?

புதுச்சேரி சட்ட மன்ற சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தேசிய ஜனநாயாக கூட்டணி சார்பில் மணவெளி தொகுதி பாஜக எம்எல்ஏ செல்வம் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Samayam Tamil 14 Jun 2021, 3:58 pm
புதுச்சேரி சட்டசபைக்கான சபாநாயகர் தேர்தல் நாளை மறுநாள் 16ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக சார்பில் சபாநாயகர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
Samayam Tamil வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது
வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது


இந்நிலையில், மணவெளி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் செல்வம் தனது வேட்பு மனுவை முதல்வர் ரங்கசாமி முன்மொழிய, பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நமச்சிவாயம் வழிமொழிய சட்டப்பேரவை செயலர் முனுசாமியிடம் இன்று தாக்கல் செய்தார்.

சபாநாயகர் தேர்தலில் வேறு யாரும் போட்டியிடாத பட்சத்தில் செல்வம் போட்டியின்றி ஏகமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார். இதன் பிறகு, அவர் 16ம் தேதி சபாநாயகராக பதவி ஏற்றுக் கொள்வார்.

சபாநாயகர் தேர்தலில் போட்டி இருக்கும் பட்சத்தில் 16ம் தேதி, குரல் அல்லது ஓட்டு முறையில் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் முன்னிலையில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.

அமோக வெற்றி கொடுக்காத காட்பாடி மக்கள்; பொடிவைத்து பேசிய அமைச்சர் துரை முருகன்!

தற்போது பெரும்பான்மையான உறுப்பினர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதால் செல்வம் போட்டி இல்லாமலேயே தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் புதுச்சேரியில் முதல் முறையாக பாஜகவை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி