ஆப்நகரம்

மின் மயானம் எப்பவும் பிசி; கொரோனாவ கொல்லுங்க!

கொரோனாவால் உயிர்பலி அதிகரித்து வருவதால் மின் மயானத்தில் எப்போது உடல்கள் எரிந்து கொண்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, கொரோனா தொற்றை குறைக்க கரூர் அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 17 May 2021, 12:57 pm
இந்திய அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து தற்போது அமைந்துள்ள திமுக அரசு முழு அளவில் ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Samayam Tamil கரூர் அரசு மருத்துவமனை
கரூர் அரசு மருத்துவமனை


கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை காவல் துறையினரே பல இடங்களில் ஊரடங்கு விதியினை காற்றில் பறக்க விட்டு விடுகின்றனர். இதனால் பொதுமக்களும் போதிய விழிப்புணர்வு மற்றும் அச்சம் இல்லாமல் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிகின்றனர்.

இதனால் கரூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு காலத்திலும் ஆங்காங்கே மக்கள் தெருக்களிலும், சாலைகளிலும் திரியும் நிலை உருவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் காவல் துறை எவ்வளவு தான் அபராதம் விதித்தாலும் சரி, மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாமல் அப்படியே சுற்றி வருகின்றனர்.

தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கரூர் அரசு மருத்துவக்கல்லூரியிலும், தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகளவில் குவிந்து வருகிறது. அதே சமயம் கொரோனா பாதித்தவர்களின் இறப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

‘என்னை கேட்காமல் எதுவும் செய்ய கூடாது’; அதிகாரிகளை மிரள வைத்த திமுக எம்எல்ஏ!

இந்நிலையில் கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை முறையாக பேக் செய்யாமல் கடமைக்கு துணியை சுற்றி பாதுகாப்பற்ற முறையில் உறவினர்களிடம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே நிலை நீடித்தால் கரூர் மாவட்டத்தில் கொரோனா இன்னும் வேகம் எடுக்கும் என்று பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

நம்பி தான் ஆகனும் ஆபீசர்; ‘போலீஸ் உங்கள் நண்பன்’

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கொரோனாவால் இறந்த சடலத்தின் மூலமும் கொரோனா தொற்று பரவும். இது அவர்களுக்கு தெரியாது போல நடக்கின்றனர். இங்குள்ள மின் மயானத்தில் எப்போதும் பிரேதங்கள் எரிந்தபடியே உள்ளது. கரூர் அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் கொரோனா வைரஸ் தொற்றினை குறைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடுத்த செய்தி