கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் எடியூரப்பாவை கண்டித்தும், அணை கட்ட அனுமதி இல்லை என மோடி அரசு வெளிப்படையாக அறிவிக்க கோரியும், கர்நாடகத்திற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என கோரியும் புதுச்சேரி காவிரி உரிமை மீட்புக்குழுவினர் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த எடியூரப்பாவின் உருவ பொம்மையை எரித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் எடியூரப்பாவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஆண் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகள்; 108 ஆம்புலன்ஸ்சில் பெண்ணுக்கு குவா.. குவா!
அப்போது அவர்கள் கர்நாடகா மேகதாதுவில் இனியும் அணையை கட்ட முயற்சித்தால் தமிழர்களை ஒன்று திரட்டி அணையை தகர்த்து எறிவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் எடியூரப்பாவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஆண் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகள்; 108 ஆம்புலன்ஸ்சில் பெண்ணுக்கு குவா.. குவா!
அப்போது அவர்கள் கர்நாடகா மேகதாதுவில் இனியும் அணையை கட்ட முயற்சித்தால் தமிழர்களை ஒன்று திரட்டி அணையை தகர்த்து எறிவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.