ஆப்நகரம்

அரசு அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு; முறைகேடு செய்த அதிகாரி கைது!

புதுச்சேரியில் இஎஸ்ஐ மண்டல அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையின் முடிவில் துணை இயக்குனர் உட்பட இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Samayam Tamil 29 Jul 2021, 10:31 am
புதுச்சேரி முதலியார்பேட்டை புவன்கரே வீதியில் இஎஸ்ஐ மண்டல அலுவலகம் இங்கி வருகிறது. இந்த மண்டல அலுகத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே ஆகிய பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு தொழிலாளர் துறை அறிவுறுத்துதலின் படி மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றது.
Samayam Tamil துணை இயக்குநரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்
துணை இயக்குநரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்


இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியில் இருந்து இஎஸ்ஐ அலுவலகம் முதல் தளத்திற்கு வந்த 4 சிபிஐ அதிகாரிகள் 7.30 மணி வரை சோதனை நடத்தினர். ஐந்தரை மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் காப்பீட்டு திட்டங்களில் முறைகேடு செய்து லஞ்சம் பெற்றதாக இஎஸ்ஐ துணை இயக்குனர் பெட்ராஸ் கிரகரி கல்கோ மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சமூக பாதுகாப்பு அதிகாரி மோஹித் ஜான் ஆகியோரை கைது செய்து அழைத்து சென்றனர்.

100 நாள் வேலை திட்டத்தில் ஊழல்; சாட்டை வீச தயாராகும் அமைச்சர்!

மேலும் தகவல்கள் அடங்கிய ஹார்ட்டிஸ்க் மற்றும் இரண்டு அட்டை பெட்டிகளில் முக்கிய ஆவனங்களையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர். இந்த விவகாரம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி