ஆப்நகரம்

செய்யும் பணியை போல மனசு சுத்தம்: 15 சவரன் நகையை மீட்டு ஒப்படைத்த தூய்மை பணியாளர்!

புதுச்சேரி கடற்கரை சாலையில் கிடந்த 15 சவரன் நகை உள்ள கைப்பையை புதுச்சேரி நகராட்சி பெண் ஊழியர் எடுத்துகொண்டு போய் போலீசார் உதவியுடன் தொலைத்த தூத்துக்குடியைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Curated bySrini Vasan | Samayam Tamil 22 May 2022, 3:13 pm

ஹைலைட்ஸ்:

  • செய்யும் பணியை போல மனசு சுத்தம்
  • 15 சவரன் நகையை மீட்டு ஒப்படைத்த தூய்மை பணியாளர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நகை மீட்பு
தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேசன் வயது (42). இவரது தந்தை சீனிவாசன் மற்றும் அவரது மனைவி சுஜாதா ஆகியோர் புதுச்சேரியில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு காலை கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகில் வந்தனர். பின்னர்இந்திராகாந்தி சிக்னல் அருகே சென்ற போது தாங்கள் கொண்டுவந்த நகை வைத்திருந்த ஹேண்ட் பேகை காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அனைவரும் கடற்கரைக்கு சென்று தேடியும் அங்கு அந்த பை காணாத்தால் அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்- நாராயணசாமி!
அப்போது புதுவை நகராட்சி தூய்மை பணியாளர் ஜெயலட்சுமி காவலர்களிடம் தனியாக கிடந்த bag-ஐ எடுத்து தன் பாதுகாப்பில் வைத்திருப்பதாக கூறி ஒப்படைத்தார். இதனையடுத்து பையை பறிகொடுத்த புகார்தாரரை அழைத்து காட்டிய போது தங்களுடையது தான் என்று அடையாளம் காட்டினர்.

அதில் உள்ள ரூபாய் ஐந்து லட்சம் மதிப்புள்ள 15 சவரன் தங்க நகைகள் இருந்தன. புகார் தெரிவித்த அரை மணி நேரத்துக்குள்ளாக அவருடைய ஹேண்ட் பேகை கண்டுபிடித்துக் கொடுத்த காவலர்களையும் பத்திரமாக எடுத்து ஒப்படைத்த புதுவை நகராட்சி ஊழியர் ஜெயலட்சுமியும் பெரியகடை காவல் நிலைய ஆய்வாளர் பாராட்டு தெரிவித்து உரியவரிடம் பேக்கை ஒப்படைத்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி