ஆப்நகரம்

பாஜக திட்டத்தைத் தொடக்கி வைத்தார் முதல்வர் நாராயணசாமி!

புதுச்சேரி சின்னையாபுரம் பகுதியில் பொலிவுறு திட்டத்தின் கீழ் ரூபாய் 18 கோடி மதிப்பில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் பணிக்கான திட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

Samayam Tamil 9 Feb 2021, 12:08 am
மத்திய அரசின் புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்காக 220 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டும் பணி தொடங்கப்பட்டது.
Samayam Tamil பாஜக திட்டத்தைத் தொடக்கி வைத்தார் முதல்வர் நாராயணசாமி!


புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட சின்னையாபுரம் பகுதியில் ரூபாய் 18.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கான பூமி பூசை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் புதுச்சேரி நகர வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் முன்னிலையில் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடிக்கல் நாட்டி வைத்தனர்.

2000 கோடி ரூபாயில் மருத்துவ பூங்கா... காரைக்கால் மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் குடியிருப்பு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த செய்தி