ஆப்நகரம்

புதுச்சேரியில் கொரோனா புதிய உச்சம்; ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பா?

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் இத்தனை பேருக்கு பாதிப்பு, இத்தனை பேர் பலியா? என பலரும் அச்சம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 17 Apr 2021, 1:58 pm
புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக 715 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil கொரோனா பரிசோதனை மும்முரம்
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது


இதில் புதுச்சேரியில் 567 நபர்கள், காரைக்காலில் 88 நபர்கள், ஏனாமில் 35 நபர்கள், மாஹேவில் 25 நபர்கள் ஆவர். தற்போது மொத்தம் 4090 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 42313 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் இருவர், காரைக்காலில் ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 705 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி