ஆப்நகரம்

ஒரு லட்சத்து 24 ஆயிரத்தைக் கடந்து சென்றது புதுச்சேரி கொரோனா பாதிப்பு!

புதுச்சேரி மாநிலத்தில் இன்று 100 பேரைக் கடந்தது கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதற்கிடையே ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்குச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Sep 2021, 8:17 pm
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 125 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ஒரு லட்சத்து 24 ஆயிரத்தைக் கடந்து சென்றது புதுச்சேரி கொரோனா பாதிப்பு!


புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 80 நபர்களுக்கும், காரைக்காலில் 23 பேருக்கும், ஏனாமில் 7 பேருக்கும், மாஹேவில் 15 நபர்களுக்கும் கொரோனா தொற்று பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்தம் 125 நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருந்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஜிப்மர் மருத்துவமனையைக் கைப்பற்றத் தீவிரவாதிகள் திட்டமா: சைபர் க்ரைம் போலீஸ் விசாரணை!
தற்போது மாநிலத்தில் 986 நபர்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் மாநிலத்தில் இதுவரை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 631 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே புதுச்சேரியில் இதுவரை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 436 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர் என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி