ஆப்நகரம்

புதிதாக 10 பேருக்கு தொற்று… ஒமைக்ரான் பரவல் தடுப்பு பணிகள் தீவிரம்!

புதுவையில் நேற்று புதிதாக 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 27 Dec 2021, 4:46 pm
புதுச்சேரி மாநிலம் முழுவதும் நேற்று 635 பேரிடம் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டது. அதில், புதுச்சேரி நகரில் மட்டும் 10 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியத்தில் ஒருவருக்கு கூட புதிதாக பாதிப்பு கண்டறியப்படவில்லை.
Samayam Tamil omicron puducherry restrictions
கோப்புப்படம்


புதிதாக 10 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியின் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில அரசுகள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

ஆனால், புதுச்சேரியில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அரசு புத்தாண்டு கொண்டாட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி கடந்த சில நாடகளாக சராசரியாக 2500 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள் நேற்று வெறும் 635 பேருக்கு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி