ஆப்நகரம்

தனியார் மயமாகும் மின்துறை… பொங்கி எழுந்த அரசியல் கட்சிகள்!

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Samayam Tamil 1 Jun 2022, 12:11 pm
புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போதே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் போராட்டம் செய்தனர்.
Samayam Tamil puducherry eb department
கோப்புப்படம்


2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின்னர் மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் மற்றும் அரசியல் கட கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசை கண்டித்தும், மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் புதுச்சேரி முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அண்ணா சிலையில் இருந்து காமராஜர் சாலை வரை நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள்முதலமைச்சர் நாராயணசாமி, திமுக சார்பில் மாநில அமைப்பாளருமான இரா.சிவா உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திமுக உட்பட மதசார்பற்ற கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும், இந்த போராட்டத்தில் திமுக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி