ஆப்நகரம்

திமுக ஆட்சிக்கு வந்தால் ஹெல்மட்டுக்கு அபராதம் கிடையாது?

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஒட்டி செல்லுபவர்களிடம் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி திமுக சார்பில் கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Samayam Tamil 3 Feb 2021, 5:23 pm
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் தவறும் பட்சத்தில் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
Samayam Tamil திமுக ஆட்சிக்கு வந்தால் ஹெல்மட்டுக்கு அபராதம் கிடையாது?


இந்த உத்தரவைப் புதுச்சேரி மாநிலத்தில் உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனத் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த சூழலில் ஹெல்மட் அணியாதவர்கள் மீது ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே போல் சம்பந்தப்பட்டவர்களின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்குள் முடக்கப்படும் எனப் புதுச்சேரி அரசு செயலர் ஜெய்சங்கர் உத்தரவு வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாகப் புதுச்சேரி போக்குவரத்து போலீசார் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஒட்டிகளிடம் அபராதமாக ரூபாய் ஆயிரம் வசூலித்து வருகின்றனர்.

இதனைக் கண்டித்து புதுச்சேரி திமுக தெற்கு அமைப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமாகிய சிவா தலைமையில் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிரண்பேடி வேண்டாம்... முதல்வர் உண்ணாவிரதம் அறிவிப்பு

அப்போது அவர்கள் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஒட்டிகளிடமிருந்து அபராதம் விதிக்கக் கூடாது என்றும் இந்த அதிகமான அபராதம் விதிப்பதை ஆளுநர் கிரண்பேடி உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின்போது, ஆளுநர்க்கும் போக்குவரத்து காவல் துறையினர்க்கும் எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த திடீர் முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி