ஆப்நகரம்

ஒரு எலுமிச்சை பழம்; பல லட்சம் பணம்; சிறுமிக்கு சூடு போட்ட..பெண் சாமியார்!

ஒற்றை எலுமிச்சை பழத்துக்கு லட்சக்கணக்கில் பணம் வசூலித்துக்கொண்டு பழுக்க காய்ச்சிய கம்பியால் சிறுமிக்கு சூடு போட்ட போபி பெண் சாமியார் வசமாக சிக்கியுள்ளார்.

Samayam Tamil 30 Jun 2022, 4:26 pm
புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் எலக்ட்ரீசியன். இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் மகனும், 7 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
Samayam Tamil போலி பெண் சாமியார்
போலி பெண் சாமியார்


இவர்களது வீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு சத்தியவதி (36) என்பவர் வாடகைக்கு குடி வந்துள்ளார். இந்நிலையில் முருகன் வீட்டில் சில பிரச்சினைகள் இருந்து வந்தது. இது குறித்து அறிந்த சத்யாவதி, ‘உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது.

இதனை உடனே போக்க அருள்வாக்கு சொல்லும் இடத்திற்கு அழைத்து செல்கிறேன்’ என கூறி லட்சுமியை காஞ்சீபுரம் அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று உள்ளார்.


அங்கு இருந்த பூசாரி அருள்வாக்கு சொல்லி ஒரு எலுமிச்சை பழத்தை கொடுத்து அனுப்பினார். அதன் பிறகும் லட்சுமி வீட்டில் நிலவிய பிரச்சினைகள் முடியவில்லை என கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து எடப்பாடி நீக்கம்; தலைமைக்கழகம் பெயரில் போஸ்டர்!

இதற்கிடையே சத்யாவதி தானே பரிகார பூஜை செய்வதாக கூறி லட்சுமியிடம் இருந்து முதலில் 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். இதே போல் அடிக்கடி லட்சுமியிடம் பணம் கேட்டு வந்தார்.

மேலும் லட்சுமியிடம் பணம் கொடுக்கவில்லை என்றால் உங்கள் பிள்ளைகள் இறந்துவிட வாய்ப்புள்ளது என சத்தியவதி மிரட்டியுள்ளார். இதனால் லட்சுமியும் அவரது மாமியாரும் பல தவணையில் நேரடியாகவும், கூகுள் பே மூலமாகவும் ரூ.20 லட்சம் ரொக்க பணம், பின்னர் 37 பவுன் நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பூஜை செய்வது போல் நடித்து சத்யாவதி லட்சுமியின் மகளை கன்னத்தில் அறைந்து, கம்பியை நெருப்பில் காய்ச்சி சூடு வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி இதுகுறித்து சத்யவதியிடம் கேட்டுள்ளார்.

முரட்டுத்தனமான முதல் இரவு; விடிந்ததும் மாப்பிள்ளை கைது!

அப்போது சத்தியவதி இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது. இதுவும் பூஜையில் ஒரு பகுதி. இதை வெளியே சொன்னால் பூஜை பலிக்காது என லட்சுமியிடம் கூறி மிரட்டி வந்துள்ளார்.

இவ்வளவு நடந்தும் தனது குடும்பத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையும், தான் ஏமாற்றப்படுவதையும் உணர்ந்த லட்சுமி இதுகுறித்து தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்த சத்யவதி புதுச்சேரி நைநார்மண்டபம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கி உள்ளார். இதை அறிந்த போலிசார் உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த சத்யவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி