ஆப்நகரம்

பாஜகவில் இணைந்த பெண் தாதா: முன்னாள் சபாநாயகர் கொலையாளி!

முன்னாள் சபாநாயகர் கொலை உள்ளிட்ட 3-கொலைகள் 15 வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் குற்றவாளியான பிரபல பெண் தாதா எழிலரசி பாஜகவில் இணைந்தார்.

Samayam Tamil 21 Jan 2021, 5:10 pm
புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல பெண் தாதா எழிலரசி. இவர் கூலிப்படை மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு முன்னாள் சபாநாயகர் சிவக்குமாரைக் காரைக்காலில் வெடிகுண்டு வீசி கொடூரமாகக் கொலை செய்தார். இதேபோல் பழிவாங்கும் நோக்கில் 2 பேரையும் கூலிப்படை வைத்து கொலை செய்துள்ளார்.
Samayam Tamil பாஜகவில் இணைந்த பெண் தாதா: முன்னாள் சபாநாயகர் கொலையாளி!
பாஜகவில் இணைந்த பெண் தாதா: முன்னாள் சபாநாயகர் கொலையாளி!


அதுமட்டுமல்லாமல் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, நில அபகரிப்பு, மாமூல் கோட்டு மிரட்டுதல் உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொழிலதிபரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.

பல இடங்களில் போலிசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் திடீரென பாஜக மாநில தலைவர் சாமிநாதன் முன்னிலையில் தாதா எழிலரசி பாஜகவில் இணைந்துள்ளார்.

தேர்தல் பரப்புரையை பாதியிலேயே நிறுத்திய முதல்வர்... காரணம் தெரிஞ்சா அசந்திடுவீங்க!

தேடப்படும் குற்றவாளியான பெண் தாதா எழிலரசி பாஜகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளின் புகலிடமாக பாஜக மாறி வருகிறது என்பது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி