ஆப்நகரம்

புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து!

புதுச்சேரி பழைய துறைமுகத்தில் சேதமடைந்த படகு ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Apr 2022, 3:35 pm
புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம் என்பதால் உப்பளம் பழைய மீன்பிடி துறைமுகத்தில் கரையோரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று மதியம் துறைமுகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சேதமடைந்த படகுகள் பாகங்கள் உடைத்து பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது.
Samayam Tamil pondicherry harbour Fire Accident


அப்போது திடீரென தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அங்கு இருந்த மீனவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரித்தவர். பின்னர் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க முடியாமல் தவித்த வீரர்கள் நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் பெரிய பாதிப்பு இல்லை. நல்வாய்ப்பாக அருகில் இருந்த மீன்பிடி படகுகள் பாதிப்பின்றி தப்பியது.

சம்பவ இடத்திற்கு வந்த ஓதியன்சாலை காவல்நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், பழுதான படகுகளை பிரிக்கும் பணியின் போது பிரிக்க முடியாததால் தீ வைத்து எரிந்ததது அம்பலமானது. பின்னர், தீ விபத்துக்கு காரணமாக இருவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

அடுத்த செய்தி