ஆப்நகரம்

என்னது..... பள்ளிகளை திறக்க கூடாதா?; மாணவர்கள் கவனம் ஈர்த்த கோரிக்கை!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 15 Jul 2021, 9:35 am

ஹைலைட்ஸ்:

  • முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீடியோ வெளியீடு
  • பள்ளி கல்லூரியை திறக்க வேண்டாம் என கோரிக்கை
  • 3வது அலை தாக்கத்தை பார்த்து முடிவினை எடுக்கலாம்


ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil முன்னாள் முதல்வர் நாராயணசாமி
முன்னாள் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டு உள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
கர்நாடகா மாநிலம் தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களுக்கு காவிரி நதிநீரை பிரித்து கொடுப்பது சம்மந்தமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு பல ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்தது.

இதற்கிடையில் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான ஆயத்த வேலைகளை ஆரம்பித்து கட்டுமான பணிகளை முடுக்கிவிட்டு உள்ளது. கர்நாடக முதல்வருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதி உடனடியாக கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் அதைப் பற்றி கர்நாடக அரசு கவலைப்படவில்லை. இதற்கிடையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்தி கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மத்திய அரசுக்கு அந்த கோரிக்கையை முன்வைத்தார்.

எனவே தமிழகத்தைபோல் புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி கர்நாடக மாநிலத்துக்கு கண்டனம் தெரிவித்து அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென நாம் கோரிக்கை வைக்க வேண்டும்.

கட்டுன மனைவியை பார்த்தது குற்றமா?; கணவனை இப்டி பண்ணி வச்சிட்டாங்க!

நாளை 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். மூன்றாவது அலையின் தாக்கத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

பள்ளி திறப்பது சம்மந்தமான முடிவை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் நாம் காப்பாற்ற முடியும். இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி