ஆப்நகரம்

புதுச்சேரி சுடுகாடாக மாறும்; ஆரூடம் சொல்கிறார் நாராயணசாமி!

கொரோனாவை கட்டுப்படுத்தாவிட்டால் புதுச்சேரி சுடுகாடாக மாறிவிடும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

Samayam Tamil 12 May 2021, 10:57 am
கொரோனா விவகாரத்தில் தோல்வி அடைந்ததற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டுமெனவும், நிர்வாகத்தை கோட்டைவிட்டு விட்டார் எனவும் புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
Samayam Tamil முன்னாள் முதல்வர் நாராயணசாமி
முன்னாள் முதல்வர் நாராயணசாமி


புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ரங்கசாமி விரைவில் குணமடைந்து வரவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். புதுச்சேரி மாநிலத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை விழித்தெழுந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா களப்பணியில் அதிகாரிகள் ஈடுபடுவதில்லை. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டர்களை கண்காணிக்கவும் பரிசோதனைகளை அதிகரித்து பணிகளை முடுக்கிவிடவும் இல்லை என்றால் கொரோனா தொற்று புதுச்சேரி மாநிலத்தை முழுமையாக சுடுகாடாக மாற்றி விடும்.

நாள்தோறும் அழுகுரலால் நோயாளிகள் அச்சம்; இந்த மருத்துவமனைல என்ன தான் நடக்குதோ!

பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன், மருந்துகள், வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலை உள்ளது. வேலை இல்லாமல் உள்ள ஏழைகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்.

கே.எஸ்.அழகிரியை விளாசி தள்ளிய தமாகா; காரணத்தை விளக்கும் பரபரப்பு தகவல்கள்!

பிரச்சாரம், தேர்தல் பணி, ஆட்சி கவிழ்ப்பு, பாஜக அல்லாத மாநிலங்களுக்கு தொல்லை கொடுப்பது போன்ற வேலைகளை பிரதமர் செய்து கொண்டு நிர்வாகத்தை கோட்டை விட்டுவிட்டார். கொரோனா விவகாரத்தில் தோல்வி அடைந்ததற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி