ஆப்நகரம்

ஆளுநர் ஆய்வின் விளைவு பூஜ்ஜியம்; இப்படி யாராலும் கலாய்க்க முடியாது!

புதுச்சேரியில் ஆளுநர் ஆய்வு செய்வதன் விளைவு பூஜ்ஜியம் தான் எனவும், சரியான கட்டமைப்பு இல்லாததால் பல உயிர்களை இழந்துள்ளதாகவும், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Samayam Tamil 16 May 2021, 12:36 pm
புதுச்சேரியில் ஆளுநர் ஆய்வு செய்வதன் விளைவு பூஜ்ஜியம் தான் எனவும், சரியான கட்டமைப்பு இல்லாததால் பல உயிர்களை இழந்துள்ளதாகவும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Samayam Tamil நாராயணசாமி
நாராயணசாமி


புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:

புதிய ஆட்சி வந்த பிறகு நிர்வாகம் சீர்க்கெட்டுள்ளது. பல துறைகளுக்குள் ஒருங்கிணைப்பில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறேன். புதுவையில் தினமும் கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அரசு மருத்துவ கல்லூரியில் ஆக்சிஜன் படுக்கை இல்லாமல் தரையிலும், நாற்காலியிலும் நோயாளிகளை படுக்கை வைத்து ஆக்சிஜன் கொடுக்கும் அவலநிலை உள்ளது. இதே நிலை தான் தனியார் மருத்துவமனையிலும் உள்ளது.

தேவையான கட்டமைப்பை உருவாக்காததன் காரணமாக பல உயிர்களை இழந்துள்ளோம். நாங்கள் ஆட்சி செய்த சமயத்தில் எந்த அளவுக்கு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தோம் என்பது மக்களுக்கு தெரியும்.

பட்டைய கிளப்பும் பாமக எம்எல்ஏ; ‘ஆக்சிஜன் ரெடி பண்ணுங்கப்பா’!

இப்போது யாரும் களப்பணிக்கு செல்வதில்லை. பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதில்லை. மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்யவில்லை. புதிதாக பதவிக்கு வந்தவர்கள் எல்லாம் மக்களை பற்றி கவலைப்படாமல் எப்படி அதிகாரத்தை பெறுவது என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

மத்திய அரசிடமிருந்து தேவையான அனைத்து வசதியையும் பெற்று தருவோம் என்று சொல்வதோடு சரி. ஒன்றும் நடைபெறவில்லை. ஆளுநர் ஆய்வு செய்வதன் விளைவும் பூஜ்ஜியம் தான். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ஐசியூ படுக்கை கிடைக்காமல் பலர் உயிரிழந்துள்ளனர்.

‘டெட் பாடி’ எரிக்க டோக்கன் வாங்கனும்; கமிஷனர் தகவலால் கலங்கும் சென்னை!

இதற்கு யார் பொறுப்பேற்பது? ஆளுநரா? அல்லது புதிதாக பொறுப்பேற்ற அரசு பொறுப்பேற்குமா? ஊரடங்கு உத்தரவை மிக தீவிரமாக செயல்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாநில நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்.

மக்களின் குறைகளை கேட்க கூட தயாராக இல்லை. மாநில நிர்வாகத்திலும் இதற்கெல்லாம் யார் பொறுப்பேற்பது? என்ற கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியுள்ளார்.

அடுத்த செய்தி