புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை பள்ளி சீருடைகள், இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் பள்ளிகள் தொடங்கப்பட்டு 7 மாதங்கள் ஆகிறது. மேலும் அரசு அறிவித்தபடி இலவச சைக்கிள் மற்றும் இலவச மடிக்கணையையும் வழங்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் பற்றாக்குறைக்கும் தீர்வு காணப்படவில்லை.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூசில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதற்காக பாஜக கூட்டணி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி தருமபுரியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி பி.சி.சி சிறப்பு அழைப்பாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதோடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஏவி சுப்பிரமணியன் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளி மாணவர்களை அலட்சியப்படுத்தும் மற்றும் வஞ்சிக்கும் பாஜக, என். ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து மழையையும் பொருட்படுத்தாமல் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.
அப்போது, ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு மாணவர்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கப்பட்டு 7 மாதங்கள் ஆகியும் இதுவரை பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது என கூறினார்.
மேலும் குறிப்பாக முதலமைச்சர் ரங்கசாமி ஆசான தொகுதியான இந்திரா நகர் தொகுதியில் உள்ள தர்மபுரி அரசு பள்ளியில் கூட மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் சீருடைகள் வழங்கப்படாதது வேதனை அளிக்கிறது. முதலமைச்சரின் செல்லபிள்ளையான இந்த தொகுதியில் அவர் தொகுதியைச் சேர்ந்த பள்ளிகளையே அவர் புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
முதற்கட்டமாக தருமபுரியில் இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாகவும், தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளிலும் பள்ளி மாணவர்களை தொடர்ந்து புறக்கணித்து வஞ்சித்து வரும் ஆளும் என். ஆர். காங்கிரஸ் பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர் பாஜக ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் வெகு நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அந்த பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி அந்த ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூசில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதற்காக பாஜக கூட்டணி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரி தருமபுரியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி பி.சி.சி சிறப்பு அழைப்பாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதோடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஏவி சுப்பிரமணியன் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளி மாணவர்களை அலட்சியப்படுத்தும் மற்றும் வஞ்சிக்கும் பாஜக, என். ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து மழையையும் பொருட்படுத்தாமல் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.
அப்போது, ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு மாணவர்களை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கப்பட்டு 7 மாதங்கள் ஆகியும் இதுவரை பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது என கூறினார்.
மேலும் குறிப்பாக முதலமைச்சர் ரங்கசாமி ஆசான தொகுதியான இந்திரா நகர் தொகுதியில் உள்ள தர்மபுரி அரசு பள்ளியில் கூட மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் சீருடைகள் வழங்கப்படாதது வேதனை அளிக்கிறது. முதலமைச்சரின் செல்லபிள்ளையான இந்த தொகுதியில் அவர் தொகுதியைச் சேர்ந்த பள்ளிகளையே அவர் புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
முதற்கட்டமாக தருமபுரியில் இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளதாகவும், தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளிலும் பள்ளி மாணவர்களை தொடர்ந்து புறக்கணித்து வஞ்சித்து வரும் ஆளும் என். ஆர். காங்கிரஸ் பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர் பாஜக ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார்.
இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் வெகு நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அந்த பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி அந்த ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.