ஆப்நகரம்

என். ஆரை விட்டா புதுச்சேரிக்கு ஆளே இல்லையாம்: மதுரையில் பன்னீர்செல்வம்!

புதுச்சேரி மக்களுக்கு என். ஆரை விட்டால் வேறு ஆள் இல்லை. அவர் தான் விரைவில் புதுவையை ஆளப் போகிறார் எனப் புதுச்சேரி முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் என். ஜி பன்னீர்செல்வம் நிருபர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.

Samayam Tamil 2 Mar 2021, 5:17 pm
என். ஆர் காங்கிரஸ் முன்னாள் புதுச்சேரி உள்ளாட்சித்துறை அமைச்சர் என். ஜி பன்னீர்செல்வம் தனது துணைவியாருடன் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்தார்.
Samayam Tamil என். ஆரை விட்டா புதுச்சேரிக்கு ஆளே இல்லையாம்: மதுரையில் பன்னீர்செல்வம்!


அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
தமிழுக்காகப் பெருமை சேர்க்கக்கூடிய மதுரை மாநகரில் உள்ள திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தேன்.

புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய புதுச்சேரியில் அனைத்து தரப்பு மக்களும் ஆவலாக ஏதிர்பார்க்கக் கூடிய மக்கள் முதல்வர் என் ஆர் அவர்களுடைய தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று வேண்டி இன்று திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுப் புறப்படுகிறேன்.

நிச்சயமாகத் திருப்பரங்குன்றம் குமரன் தங்களுடைய என் ஆர்ருக்கு ஆசி வழங்குவார். விரைவிலேயே புதுச்சேரியில் என் ஆவருடைய ஆட்சி அமையும். மக்களுடைய அனைத்து பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படும். அவரைதான் இன்றைக்குப் புதுச்சேரி மக்கள் அனைவரும் நம்பி இருக்கிறார்கள்.

கூட்டணிக்கு பதில் வரல, ஆனால் ஸ்டாலினை பற்றி பன்னீர் நான் ஸ்டாப்: மதுரை சம்பவம்!

புதுச்சேரி மக்களுக்கு அவரை விட்டால் வேறு ஆள் இல்லை. அவர்தான் விரைவில் புதுவையை ஆளப் போகிறார் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி