ஆப்நகரம்

சமூக ஆர்வலர் நூதன பிரச்சாரம்; கொரோனா நோய் விழிப்புணர்வு!

புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கொரோனா வைரஸ் 3வது அலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் கீற்று கொட்டகை அமைத்து புதுச்சேரியில் இருந்து சென்னை வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Samayam Tamil 16 Aug 2021, 11:01 am
புதுச்சேரியை சேர்ந்த அறம் நலப்பணிச் சங்க தலைவர் ஆனந்தன் தனது இருசக்கர வாகனத்தில் வித்தியாசனமான முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
Samayam Tamil பாஜக நியமன எம்எல்ஏ அசோக்பாபு துவக்கி வைக்கிறார்
பாஜக நியமன எம்எல்ஏ அசோக்பாபு துவக்கி வைக்கிறார்


அந்த வகையில் இந்த முறை நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டும், கொரோனா வைரஸ் மூன்றாம் அலை பற்றிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்களிடம் விழிப்புணர்வாக எடுத்து கூறும் வகைகயிலும் புதுச்சேரி முதல் சென்னை வரை இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி தனது இருசக்கர வாகனத்தின் மேல் கீற்று கொட்டகை அமைத்து அதில் கொரோனா விழிப்புணர்வு வாசங்களை அமைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் கொரோனா விழிப்புணர்வு பாடல்களை ஒலிக்க செய்துள்ளார்.

காணி பழங்குடியினருக்காக அங்காடி; மக்கள் வளர்ச்சிக்கு கலெக்டர் முயற்சி!

தனது நண்பரும் அறம் நலப்பணிச் சங்க துணை தலைவருமான சீத்தாரமன் என்பவரையும் தனது இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர வைத்துக்கொண்டு விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு உள்ளார்.

கேஸ் பழுது நீக்கிவிட்டு கொள்ளை; சிசிடிவியில் சிக்கிய டெக்னீஷியன்!

இந்த விழிப்புணர்வு பயணம் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழிப்புணர்வு பயணத்தை பாஜக நியமன எம்எல்ஏ அசோக்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது பாஜக கூட்டுறவு பிரிவு தலைவர் வெற்றிச்செல்வன் மற்றும் பலர் இருந்தனர்.

அடுத்த செய்தி