புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமைச்சர்கள் பங்கீடு குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டு நேற்று காலை துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசையை சந்தித்து அமைச்சர் பட்டியலை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இந்நிலையில் நேற்று மாலை சுகாதாரத்துறைக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும் தடுப்பூசியை ஊக்கப்படுத்த பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றது. இன்று கூட மிகப்பெரிய ஜவுளி நிறுவனம் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 10 சதவீதம் தள்ளுபடி என்று அறிவித்துள்ளது பாராட்டுக்குறியது.
டெல்டா பிளஸ் வைரஸ் தாக்குதலை தடுக்க தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியம். புதுச்சேரி மாநிலத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை.
இதை செய்தால் ‘டெல்டா பிளஸ் வைரஸ்’ தாக்காது; ‘டாக்டர்’ தமிழிசை சவுந்தர்ராஜன் சூப்பர் அறிவுரை!
முதலமைச்சர் ரங்கசாமி அளித்த அமைச்சரவை பட்டியல் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி மதியம் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும். இவ்வாறு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும் தடுப்பூசியை ஊக்கப்படுத்த பல்வேறு நிறுவனங்கள் முயன்று வருகின்றது. இன்று கூட மிகப்பெரிய ஜவுளி நிறுவனம் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 10 சதவீதம் தள்ளுபடி என்று அறிவித்துள்ளது பாராட்டுக்குறியது.
டெல்டா பிளஸ் வைரஸ் தாக்குதலை தடுக்க தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியம். புதுச்சேரி மாநிலத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை.
இதை செய்தால் ‘டெல்டா பிளஸ் வைரஸ்’ தாக்காது; ‘டாக்டர்’ தமிழிசை சவுந்தர்ராஜன் சூப்பர் அறிவுரை!
முதலமைச்சர் ரங்கசாமி அளித்த அமைச்சரவை பட்டியல் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி மதியம் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறும். இவ்வாறு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.