ஆப்நகரம்

அரசு பேருந்துகள் இயங்காது: தீவிரமெடுக்கும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!

பணி நிரந்தரம் செய்யக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் பேருந்துகளை இயக்கவிடாமல் 2ஆவது நாளாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Samayam Tamil 21 Jan 2021, 4:21 pm
புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம் கோரி போக்குவரத்து ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
Samayam Tamil அரசு பேருந்துகள் இயங்காது: தீவிரமெடுக்கும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!
அரசு பேருந்துகள் இயங்காது: தீவிரமெடுக்கும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!


புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக 270க்கும் மேற்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில் ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை இவர்கள் முன்னெடுத்து வந்தனர்.

எனினும் அரசு இதுவரை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிமனையிலிருந்து பேருந்துகளை இயக்கவிடாமல் தடுத்த நிறுத்தி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

மொத்தமாகவே புதுச்சேரியில் 10 லட்சம் வாக்காளர்கள்தான்!

இதன் காரணமாக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் முடக்கப்பட்டதால் கிராமப்புறங்களுக்கும் செல்லும் பயணிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். விரைவில் அரசு ஊழியர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

அடுத்த செய்தி