ஆப்நகரம்

பொய் செய்தி ஊடகங்களுக்கு: முதல்வர் சொன்ன பதில் இதுதான்!

புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்ததாக வெளியான செய்தி அனைத்தும் பொய் என இப்போது தெரியவந்துள்ளது.

Samayam Tamil 13 Jan 2021, 11:37 pm
புதுச்சேரி அமைச்சர் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் எனப் பேட்டி அளித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி, அதற்காகத் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
Samayam Tamil பொய் செய்தி ஊடகங்களுக்கு: முதல்வர் சொன்ன பதில் இதுதான்!
பொய் செய்தி ஊடகங்களுக்கு: முதல்வர் சொன்ன பதில் இதுதான்!


அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என பல்வேறு பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன. இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செயததாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் உறுதிப்படுத்தாத தகவலை ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவங்களுக்குதான் மொதல்ல கொரோனா தடுப்பூசி போடணும்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தொடர்ந்து 25 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாரவுக்கு விரைவில் சட்டமன்றத்தில் பாராட்டு விழா நடத்த இருப்பதாகவும் முதல்வர் நாராயணசாமி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி