ஆப்நகரம்

வாடகை வீட்டில் அழகிகள்.. களைகட்டும் 'ஹைடெக்' விபச்சாரம்!

புதுச்சேரியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வந்த கணவன் - மனைவி உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 May 2022, 5:20 am

ஹைலைட்ஸ்:

  • வாடகை வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம்
  • கணவன் - மனைவி கைதால் புதுவையில் பரபரப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Puducherry prostitution
கோப்புப்படம்
சுற்றுலா நகரமான புதுச்சேரியில், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் நபர்களை குறிவைத்து மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களில் சட்டவிரோதமாக விபச்சார தொழில் செய்யப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆனாலும், புது புது ரூட்டில் ஒரு கும்பல் விபச்சார தொழிலை ஹைடெக்காக செய்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரி புதுசாரம் ஞானபிரகாசம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாட்களாக சந்தேகத்திற்கிடமான வகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள் வந்து சென்றுள்ளனர்.

இதனை கண்காணித்த அக்கம் பக்கத்தினர், கோரிமேடு காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது, அங்கு விபச்சார தொழில் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பாகூர் பகுதியை சேர்ந்த நாகப்பன் (39), அவரது மனைவி சர்மிளா (39) ஆகியோர் கூட்டாக சேர்ந்து வாடகைக்கு வீடு பிடித்து அழகிகளை வைத்து விபசாரம் செய்ததும், அவர்களுக்கு புரோக்கராக நெல்லித்தோப்பை சேர்ந்த மாரியம்மாள் (52) பணி புரிந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் விபச்சாரம்(prostitution) தொழிலில் ஈடுபட்ட இரண்டு இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். புதுச்சேரியில் ஏற்கனவே மசாஜ் சென்டர்கள், பியூட்டி பார்லர்களில் விபச்சாரம் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பல இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி