ஆப்நகரம்

ஒரு நாளில் இத்தனை பலியா?; கொரோனா கோர தாண்டவம்!

புதுச்சேரி மாநிலத்தில் 2வது நாளாக கடந்த 24 மணிநேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை புதுச்சேரியில், அதிகப்பட்சமாக 1703 பேர் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைகள் பெற்று வருகின்றனர்.

Samayam Tamil 8 May 2021, 1:35 pm
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் 9,132 பேருக்கு பரிசோதனை செய்ததில் கடந்த 24 மணி நேரத்தில் 1703 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil புதுச்சேரி கொரோனா பாதிப்பு நிலவரம்
புதுச்சேரி கொரோனா பாதிப்பு நிலவரம்


இதில் புதுச்சேரியில் 1355 நபர்கள், காரைக்காலில் 171 நபர்கள், ஏனாமில் 153 நபர்கள், மாஹேவில் 24 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 13,585 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 55,552 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 19 போலீசுக்கு ‘கொரோனா’; 200ஐ நெருங்கியதால் போலீசார் பீதி!

2வது நாளாக கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் புதுச்சேரியில் 14 பேரும், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் 3 பேர், மாஹேவில் ஒருவர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி