ஆப்நகரம்

இது ஒரு அதிகாரமற்ற சட்டமன்றம்: புதுவை முதல்வர் விளக்கம்

மாநில வளர்ச்சி பாதிக்கப்படுவதை குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை என்று புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Feb 2021, 10:05 am
அதிகாரமில்லாத சட்டமன்றம் இருந்தும் எந்தவித பிரயோஜனமும் இல்லை. எனவே எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து வந்தால் மாநில அந்தஸ்தை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil narayanasamy


இது குறித்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி தெரிவித்ததாவது: “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 35 ஆண்டுகளாக எல்லோரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது புதுச்சேரியில் ஆளுநரை நியமித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. இதனால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுவதைக் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. இது குறித்து மத்திய அரசிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் உத்தேசம் இல்லை என மத்திய அரசு கைவிரித்து விட்டது என்றும் தெரிவித்தார்.

சசிகலாவுக்கு உதவிய எட்டப்பர்கள் மீது கட்சி நடவடிக்கை பாயும்... அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை!

தற்போது மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க தயாரா என என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார். மத்திய அரசு நமது உரிமைகளை பறிப்பதால் காங்கிரஸ் கட்சியின் தலைமையின் முடிவை கேட்டு இந்த விவகாரத்தில் நாங்கள் எங்கள் முடிவை தெரிவிப்போம்” என்று தெரிவித்தார்.

மேலும், “ கடந்த 5 ஆண்டுகாலமாக, அமைச்சரவையில் முடிவெடுத்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு, ஆளுநரிடம் தடை வருகிறது. அப்படியென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன மரியாதை” என்றும் கேள்வியெழுப்பினார்.

அதேபோல, “அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து வந்தால் தேர்தலை புறக்கணிப்பது பற்றி முடிவெடுப்போம். இந்த முடிவில் எங்களின் கட்சி தலைமையின் நிலைப்பாட்டை அறிந்து தான் செயல்படுவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி