ஆப்நகரம்

10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதால் மன உளைச்சல் - காரைக்கால் மாணவன் தூக்கில் தொங்கிய அவலம்

காரைக்காலில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாததால் மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 19 May 2023, 8:48 pm

ஹைலைட்ஸ்:

  • இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
  • காரைக்காலில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாததால் மாணவர் ஒருவர் தற்கொலை
  • மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் சோகம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Karaikal 10th standard student suicide,


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022 - 2023 கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி துவங்கிய இருபதாம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின.
அதில் அதிகப்படியான சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும் சில மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் எம்ஜிஆர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஐயப்பன் என்பவரின் மகன் ராகவன்.

அன்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளைத்தை பின் தொடரவும்

இவர் காரைக்கால் தந்தை பெரியார் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அவர் பொது தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

அதனால் தேர்ச்சி பெறாததை எண்ணி அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். துக்கம் தாங்காத நிலையில் இருந்து வந்த அவர் வீட்டிற்கு சென்று அறையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



இதனை கண்ட அவரது பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரத்தில் சோகம் - கவர்னரிடம் பாராட்டு பெற்ற ஆசிரியரும், மாணவரும் சாலை விபத்தில் பலி

இதனை எடுத்து மாணவரின் தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் மாணவர் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி