ஆப்நகரம்

அச்சுறுத்தும் கொரோனா; ஆளுநர் அவசரகால நடவடிக்கை!

புதுச்சேரியில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் துணை நிலை ஆளுநர் அவசர கால நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்.

Samayam Tamil 23 Apr 2021, 10:44 am
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், சிகிச்சையளிக்கவும் துணை நிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் ஆளுநர் மாளிகையில் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Samayam Tamil துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்
கூட்டத்தில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசுகிறார்.


இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதலாக 2000 படுக்கைகளை அதிகப்படுத்துவது. ஆக்ஸிஜன் கொள்ளளவை இப்போது இருப்பதை விட பல மடங்கு உயர்த்துவது. வென்டிலேட்டர் எண்ணிக்கை அதிகப்படுத்துவது.

2 சப்.இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா!

ஆர்டிபிசி ஆர் பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்துவதற்கும் அதன் முடிவுகள் தாமதமின்றி கிடைப்பதற்கும் நடவடிக்கை. கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால் அதிகப்படியான சிறப்பு மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் அவசரகால நடவடிக்கையாக உடனே பணியமர்த்த நடவடிக்கை.

ரெம்டெசிவிர் மருந்து இன்னும் 10 ஆயிரம் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப வென்டிலேட்டர் கருவிகள் செயற்கை முறையில் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் போன்றவற்றை உடனே கூடுதல் எண்ணிக்கையில் கொள்முதல் செய்வது என பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி