ஆப்நகரம்

உறவினர் வீட்டில் காதணி விழா; தம்பதி விபரீத முடிவு!

புதுச்சேரியில் உறவினர் வீட்டில் காதணி விழா நடந்த நேரத்தில் தம்பதி எடுத்த விபரீத முடிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Samayam Tamil 23 Apr 2021, 11:33 am
புதுச்சேரி, லாஸ்பேட்டை ராமன் நகரை சேர்ந்தவர் தனசேகர் (43). கார் ஓட்டுநர். இவரது மனைவி சந்திரகுமாரி (35). இவர்களுக்கு 15 வயதில் மகளும், 11 வயதில் மகனும் உள்ளனர். தனசேகர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
Samayam Tamil சடலமாக மீட்கப்பட்ட தம்பதி
தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


அதேபோல் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் வசித்து வரும் சந்திரகுமாரியின் அண்ணன் சந்திரசேகரின் மகளுக்கு காதணி விழாவிற்கு சீர் செய்ய வேண்டும் என்பதில் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.

ஊரடங்கை மறுபரிசீலனை செய்யணும்; வர்த்தக சபை கோரிக்கை!

இந்நிலையில் மயிலத்தில் நடைபெற்ற சந்திரசேகர் மகளின் காதணி விழாவுக்கு சந்திரகுமாரியின் பிள்ளைகள் மட்டும் சென்றுள்ளனர். தங்கை மற்றும் தங்கையின் கணவர் காதணி விழாவிற்கு வராததால் சந்திரசேகருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே தனது மகளின் காதணி விழாவை முடித்துவிட்டு தங்கையின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது தனசேகர் தூக்கில் தொங்கியபடியும், அவரது காலின் கீழே தங்கை சந்திரகுமாரி வாயில் நூரை தள்ளியபடியும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அச்சுறுத்தும் கொரோனா; ஆளுநர் அவசரகால நடவடிக்கை!

இதனை அடுத்து சம்பவம் குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் சந்திரசேகர் புகாரளித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவன், மனைவி மரணம் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி