ஆப்நகரம்

தமிழிசை வரவேற்பில் திக் திக்... தந்தை 2 குழந்தையோடு தற்கொலை முயற்சி!

காரைக்காலில் தமிழிசை செளந்தரராஜனுக்கு அரசு மரியாதை கொடுக்க தயாராக இருந்த நிலையில் நகராட்சி ஒப்பந்த ஊழியர் திடீரென குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Feb 2021, 10:09 pm
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பைக் கூடுதலாகப் பொறுப்பேற்ற தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றார்.
Samayam Tamil தமிழிசை வரவேற்பில் திக் திக்... தந்தை 2 குழந்தையோடு தற்கொலை முயற்சி!


அதன் தொடர்ச்சியாகப் புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான காரைக்கால் மாவட்டத்திற்கு ஆய்வு செய்யத் தமிழிசை சென்றார். முதல்முறையாகக் காரைக்காலுக்கு வரும் ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறை அணிவகுப்பு மரியாதை கொடுப்பது வழக்கம்.

அது போல் தமிழிசையை வரவேற்கத் தயாராக இருந்த நிலையில் காரைக்கால் நகராட்சியின் ஒப்பந்த நிறுவனத்தில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபடும் வாகன ஓட்டுநர் ஏசுராஜ் என்பவர் தனது இரு குழந்தைகளுடன் வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்.

கிரண்பேடி இனவெறி உத்தரவு: ஆதாரத்துடன் அம்பலமானது உண்மை!

இந்த தற்கொலை முயற்சியின்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்திக் காப்பாற்றி குழந்தைகளையும் மீட்டனர். உடனடியாக அந்த நபரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி