ஆப்நகரம்

புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம்; ஜாக்பாட் அடிக்குது!

புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Samayam Tamil 22 Apr 2021, 9:25 am
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
Samayam Tamil முன்னாள் முதல்வர் நாராயணசாமி
முன்னாள் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை


புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போடும் ஆர்வம் மக்களிடையே குறைந்துள்ளது. தடுப்பூசி போடுவதுதான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வசதியாக இருக்கும்.

மேலும் 2 மாத காலத்திற்குள் குறைந்தது 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும். கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அவர்களுக்கு யார் நிவாரணம் வழங்குவது?

கடந்த ஊரடங்கின்போது மக்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கினோம். தற்போது ஆளுநர் நிவாரணம் குறித்து அறிவிக்கவில்லை. உடனடியாக உரிய முடிவு எடுக்க வேண்டும். அவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கி குடும்பத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.

கோவை கள்ளநோட்டு கும்பல்; சுற்றிவளைத்த கேரளா போலீஸ்!

மத்திய அரசு ஆக்சிஜன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த தவறான முடிவின் காரணமாக தற்போது நமது நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு இருப்பதால் நம் நாட்டு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர்.

இந்நிலையில் 6 கோடி தடுப்பூசி மருந்துகளை பல நாடுகளுக்கு பிரதமர் அனுப்பியுள்ளது மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம். இவ்வாறு நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி