ஆப்நகரம்

தேர்தலில் சிலிர்க்க வைத்த புதுச்சேரி பாட்டிகளும், தாத்தாக்களும்...

புதுச்சேரி மாநிலத்தில் வயதில் மூத்தவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்த சம்பவம் மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Apr 2021, 11:02 pm
புதுச்சேரி மாநிலத்தில் நடக்கமுடியாத பாட்டிகள், கண்ணு தெரியாத முதியவர்கள் ஆர்வத்துடன் நேரில் சென்று வாக்களித்து தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினர்.
Samayam Tamil தேர்தலில் சிலிர்க்க வைத்த புதுச்சேரி பாட்டிகளும், தாத்தாக்களும்...


புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி காலை முதல் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

அந்த வகையில் கிராமப்புறங்களில் நடக்கமுடியாத மூதாட்டிகள், தாத்தாக்கள் மற்றும் கண்பார்வையற்ற முதியவர்கள் உட்பட ஏராளமானோர் பிறரின் உதவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

வாக்காளர்களுக்கு இப்படியொரு வசதி... அசத்தும் புதுச்சேரி கலெக்டர்!

முதியவர்கள் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு வந்து தங்கள் கடமையைச் செய்து முடித்தது மாநிலத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே புதுச்சேரி மாநிலத்தில், 81. 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி