ஆப்நகரம்

கிரண்பேடி இனவெறி உத்தரவு: ஆதாரத்துடன் அம்பலமானது உண்மை!

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய வடமாநில ஊழியர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

Samayam Tamil 20 Feb 2021, 12:27 pm
துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவி வகித்தபோது அரசுத் துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள் Deputation அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்தனர்.
Samayam Tamil கிரண்பேடி இனவெறி உத்தரவு: ஆதாரத்துடன் அம்பலமானது உண்மை!


இதற்கிடையே ஆளுநர் மாளிகையில் அதிக செலவு ஏற்படுகிறது. அதிக அளவில் ஊழியர்கள் இருப்பதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனால் பல ஊழியர்கள் அவர்களது தொழிலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த 3 ஊழியர்களை ஆளுநர் மாளிகைக்கே அப்போது ஆளுநராகவிருந்த கிரண்பேடி திரும்ப அழைத்துள்ளார்.

புதுச்சேரி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசியா, பணமா? -முதல்வரின் முடிவை மாற்றும் தமிழிசை!

அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்து 15ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். வடமாநில ஊழியர்களை மட்டும் கிரண்பேடி நிரந்தரம் செய்து அதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளார்.

அதேநேரத்தில் புதுச்சேரியில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பல மாதங்களாகச் சம்பளம் இன்றி பதவி உயர்வும் இன்றி பணியாற்றி வருவதும், போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி