ஆப்நகரம்

சிசிடிவியில் சிக்கிய 8 வாலிபர்கள்; என்ன தப்பு செய்தாங்க தெரியுமா?

புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டிருந்த 8 வாலிபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு, புதுச்சேரி கிருமாம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, பிடிப்பட்டவர்களிடம் தெற்கு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 8 May 2021, 12:54 pm
புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவர் அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வடிவேல் வியாபாரத்திற்கு மீன் வாங்குவதற்காக விடியற்காலை 3.30 மணி அளவில் கடலூர் புதுச்சேரி சாலை கிருமாம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார்.
Samayam Tamil கைது செய்யப்பட்ட வாலிபர்கள்
கைது செய்யப்பட்ட வாலிபர்கள்


அப்போது அடையாளம் தெரியாத 5க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த வெள்ளி நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து வடிவேல் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரி-கடலூர் சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

போலீஸ்காரர் மண்டை ‘டமால்’; பாஜக மாவட்ட செயலாளர் கைது!

அப்போது 4 இருசக்கர வாகனத்தில் 8 வாலிபர்கள் வழிப்பறி நடைபெற்ற நேரத்தில் அவ்வழியே சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த இருசக்கர வாகனம் எண்ணை வைத்து, புதுச்சேரியில் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த குமரகுரு, ரமணா, அர்ஜுன், பாலாஜி, ஏழுமலை, விஷ்ணு, ஜெயமூர்த்தி, விஜய் ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் கடந்த மாதம் தவளக்குப்பம் பகுதியில் கோழி கடை ஒன்றை உடைத்து பணம் மற்றும் சிசிடிவி டிவிஆர் மற்றும் அதே பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது.

கொரோனா வந்துடுச்சோ?; கணவன், மனைவி விபரீத முடிவு!

அதேப்போல் இவர்கள் மீது புதுச்சேரி மங்களம், வில்லியனூர், மடுகரை, தமிழக பகுதியான கடலூர் ஆகிய இடங்களில் தொடர் வழிப்பறி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதை தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் தெற்கு தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து செல்போன், பைக், பணம், நகை, கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

அடுத்த செய்தி