ஆப்நகரம்

9 வயது சிறுமியிடம்.. ஆபாச பேச்சு; கன்னியாகுமரியில் டிரைவர் கைது!

புதுச்சேரி சிறுமியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய கன்னியாகுமரியை சேர்ந்த கார் ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 19 Sep 2021, 12:35 pm
புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளை கவனித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
Samayam Tamil கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்


அதில் எதிர்முனையில் பேசிய மர்ம நபர் சிறுமியிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

உடனே பெற்றோர் இதுதொடர்பாக முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சார்பு ஆய்வாளர் இளவரசன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினார்.

போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியிடம் ஆபாசமாக பேசியது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் லாசர் (43) என்பது தெரிய வந்தது.

கவர்னர் மீது அதிக புகார்கள் இருக்கு; அதிர்ச்சி தகவல் தரும் திருமாவளவன்!

இதனை அடுத்து முதலியார்பேட்டை போலீசார் உடனடியாக கன்னியாகுமரி விரைந்து சென்று, லாசரை அதிரடியாக கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி