ஆப்நகரம்

விளையாட வந்த சிறுமியிடம்...; ‘விளையாட்டு’ காட்டிய வாலிபர்!

புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பம், ராயப்புதுப்பாக்கத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த விவகாரத்தில் வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் 15 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 May 2021, 2:30 pm
நாடு முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. தமிழ்நாடு மற்றும் நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் இரு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil சிறுமிக்கு தொல்லை கொடுப்பதை விளக்கும் படம்
சிறுமிக்கு தொல்லை கொடுப்பதை விளக்கும் படம்


இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலில் புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பம் ராயப்புதுப்பாக்கத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த ராயப்புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன் (25). இவரது வீட்டின் அருகே பெற்றோருடன் வசித்து வருகிறார் 15 வயது சிறுமி.

கடந்த 13ம் தேதி சிறுமி வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சரவணன், ‘வா.... பாப்பா, ஒளிஞ்சு விளையாடுவோம்’ என கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர், சிறுமிக்கு சரவணன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

ஒரே குடும்பத்தை குறி வைத்த கொரோனா; அதுக்குன்னு இத்தனை பேரா சாவுறது?

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது தாயிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

அடுத்த செய்தி