ஆப்நகரம்

முதலில் உள்ளாட்சித் தேர்தல் வேண்டும்: புதுச்சேரியில் தீவிரமெடுக்கும் போராட்டம்!

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி ஏராளமான முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

Samayam Tamil 23 Feb 2021, 6:39 pm
புதுச்சேரி மாநிலத்தில் மக்களுக்கு அதிகாரம் வழங்கும் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் நிதி மற்றும் நிர்வாக நெருக்கடிகளில் சிக்கித்தவித்து வரும் புதுச்சேரி நிர்வாகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறி அனைத்து அரசியல் கட்சியினர் நடைப்பயணமாகச் சென்றுள்ளனர்.
Samayam Tamil முதலில் உள்ளாட்சித் தேர்தல் வேண்டும்: புதுச்சேரியில் தீவிரமெடுக்கும் போராட்டம்!


புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சி பரப்புக்கு உடனடியாக மத்திய அரசு மாநில தகுதி வழங்கிட வேண்டும் எனக் கோரி முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

புதுச்சேரி எல்லைப் பகுதியான மதகடிப்பட்டு கடைவீதியிலிருந்து தொடங்கிய நடைப்பயணத்தை முன்னாள் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

மாஃபியா ராஜ்ஜியம் நடத்தும் மோடி, அமித்ஷா: தினேஷ் குண்டுராவ் விமர்சனம்

அங்குத் துவங்கிய நடைப்பயணம் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் நிறைவுபெற்றது. இந்த நடைப் பயணத்தில் பத்துக்கும் மேற்பட்ட சமூக, ஜனநாயக இயக்கத் தலைவர்களும், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி