ஆப்நகரம்

கொட்டும் மழையில் செத்து போராட்டம்: தினக்கூலியாக மாற்ற ஊழியர்கள் ஒப்பாரி!

பொதுப்பணித் துறையில் பணிபுரியும் வவுச்சர் ஊழியர்கள் தங்களைத் தினக்கூலி ஊழியர்களாக நியமிக்க வலியுறுத்திக் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பிணம் போல் அமர்ந்தும் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 12 Jan 2021, 3:00 pm
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் ஆயிரத்து 311 நபர்கள் வவுச்சர் ஊழியர்களாக பணியில் உள்ளனர். கடந்த 10 வருடமாக பணிபுரிந்து வரும் இவர்களுக்கு 16 நாட்கள் மட்டுமே பணிக்குச் சென்றுள்ளனர்.
Samayam Tamil கொட்டும் மழையில் செத்து போராட்டம்: தினக்கூலியாக மாற்ற ஊழியர்கள் ஒப்பாரி!
கொட்டும் மழையில் செத்து போராட்டம்: தினக்கூலியாக மாற்ற ஊழியர்கள் ஒப்பாரி!


இதை கணக்குக்காட்டி அதற்காக நாள் ஒன்றுக்கு ரூபாய் 200 வீதம் ஊதியம் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் தங்களை முழு நேரத் தினக்கூலி பணியாளர்களாக நியமனம் செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈட்டுப்பட்டு வந்தனர்.

அதன் தொடர்ச்சியாகக் குறிப்பிட்ட ஊழியர்கள் செவ்வாய்க் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் வழியாக அவர்கள் தங்களை முழு நேரத் தினக்கூலி ஊழியர்களாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

புகையில்லா போகி கொண்டாடுவது எப்படி?

மேலும் அவர்கள் மத்திய அரசு அறிவித்துள்ள ஒரு நாளுக்கான குறைந்தபட்ச ஊதியமான ரூபாய் 600ஐ வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த போராட்டத்தில் வவுச்சர் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். போராட்டத்தின் ஒருகட்டமாக அண்ணா சிலை அருகே பிணம் போல் அமர்ந்து, ஒப்பாரி வைத்து, நடனம் ஆடி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அடுத்த செய்தி