ஆப்நகரம்

பிறந்த நாளில் முதல்வர் ‘வாக்குறுதி’; உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மீனவர்கள்!

புதுச்சேரியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி 75,000 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா மனப்பட்டு கிராமத்தில் தொடங்கப்பட்டது. இதில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மீனவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டார்.

Samayam Tamil 3 Aug 2021, 5:02 pm
புதுச்சேரியில் 75வது சுதந்திர தின திருநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்னும் 75,000 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா பாகூர் கொம்யூனில் உள்ள மனப்பட்டு கிராமத்தில் இன்று தொடங்கப்பட்டது.
Samayam Tamil புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி


மனப்பட்டு வனத்துறை தோட்டத்தளத்தில் நடந்த இந்த மரம் நடும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துணைநிலை ஆளுநர் தமிழசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம் உட்பட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:

தற்போது 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் பல லட்சம் மரங்கள் நடப்பட்டு புதுச்சேரியை பசுமையாக்குவோம். பாகூர் பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பாகூர் மீனவ கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்தி தரப்படும். புதுச்சேரி மாநிலத்தை எல்லோரும் விரும்பும் மாநிலமாக உருவாக்க பாடுபட வேண்டும். புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

உங்களிடம் குடும்ப அட்டை இருக்கா?; இது எல்லாம் இலவசமாக கிடைக்கும்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு என்னென்ன தேவை என்று துணை நிலை ஆளுநருக்கு தெரியும். புதுச்சேரியை பசுமையான, தொழில் வளம் வாய்ந்த மாநிலமாக மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.

அடுத்த செய்தி