ஆப்நகரம்

புதுச்சேரியில் குறையும் கொரோனா!

புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 29 Nov 2021, 11:45 pm
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 5 நபர்களுக்கும், காரைக்காலில் 3 நபர்களுக்கும், மாஹேவில் 4 நபர்களுக்கும் என மொத்தம் 12 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்தில் தற்போது 296 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil Omicron Virus


மேலும், மாநிலத்தில் இதுவரை 1,26,725 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,28,893 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி முதல் தவணை 7,54,594 பேரும், இரண்டாம் தவணை 4,63,994 பேரும் செலுத்தியுள்ளனர். மொத்தமாக 12,18,588 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு புதுச்சேரியில் பரவாத வண்ணம் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி