ஆப்நகரம்

உருமாறும் கொரோனா... ஒமிக்ரான் வைரஸ் பரவல்!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Nov 2021, 4:01 pm
புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 2,540 பேரிடம் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், புதுச்சேரியில் 18 நபர்களுக்கும், காரைக்காலில் 8 நபர்களுக்கும், ஏனாமில் ஒருவர், மாஹேவில் 8 நபர்களுக்கும் என மொத்தம் 35 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புதுவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 326-ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil puducherry corona update
கோப்புப்படம்


மாநிலம் முழுவதும் இதுவரை 1,28,860 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை 1,26,662 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,872 பேர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தனர். கொரோனா தடுப்பூசி முதல் தவணை 7,49,928 பேரும், இரண்டாம் தவணை 4,57,750 பேரும் செலுத்தியுள்ளனர். மொத்தமாக 12,07,678 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதனிடையே, தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பரவால் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மக்கள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தபப்ட்டுள்ளது.

அடுத்த செய்தி