ஆப்நகரம்

உங்க பிரச்சினைக்கு எங்களைப் படுத்துவதா? புதுச்சேரி கவர்னர் விவகாரத்தில் கொதிக்கும் திமுக பிரதிநிதி

​​போக்குவரத்தை தடைசெய்து மக்களுக்கு துயரங்களை ஏற்படுத்தி, வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, ஒரே ஒரு தனி நபருக்கு பாதுகாப்பு அளிப்பது எப்படி சரியாகும்? 24 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை கமிட்டி உத்தரவிட்டும், தடுப்புக் கட்டைகளை முழுமையாக அகற்றவில்லை.

Samayam Tamil 23 Jan 2021, 4:20 am

ஹைலைட்ஸ்:

  • போக்குவரத்தை தடைசெய்து மக்களுக்கு துயரங்களை ஏற்படுத்தி, வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, ஒரே ஒரு தனி நபருக்கு பாதுகாப்பு அளிப்பது எப்படி சரியாகும்?
  • 24 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை கமிட்டி உத்தரவிட்டும், தடுப்புக் கட்டைகளை முழுமையாக அகற்றவில்லை.

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil puducherry assembly
'நகரத்தில் வைத்து தடுப்புக் கட்டைகள், இரும்பு வேலியை உடனே அகற்றி மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்ய வேண்டும்' என, வடக்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் எஸ்.பி.,சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: புதுச்சேரியில் பாதி நகரத்தை அடைத்து தடுப்புக் கட்டை அமைத்தும், முள்வேலிகளை போன்று அமைத்தும் போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்தை தடைசெய்து மக்களுக்கு துயரங்களை ஏற்படுத்தி, வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, ஒரே ஒரு தனி நபருக்கு பாதுகாப்பு அளிப்பது எப்படி சரியாகும்?

மத்திய அரசு உடனே தலையிட்டு பிரச்னையை தீர்க்க வேண்டும் அல்லது கவர்னரை டில்லிக்கு வரவழைத்து பிரச்னை முடியும் வரை அங்கேயே தங்கச் செய்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்.தடுப்புக் கட்டைகளை 24 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை கமிட்டி உத்தரவிட்டும், தடுப்புக் கட்டைகளை முழுமையாக அகற்றாமல், பேரிகார்டுகளை பெயரளவுக்கு தள்ளி வைத்து சமாளிப்பது சரியான நடைமுறை அல்ல. தடுப்புக் கட்டை, இரும்பு வேலியை உடனே அகற்றி மக்கள் நிம்மதியாகவாழ மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி