புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் போடப்பட்டு வருகிறது. இதற்காக 13 மையங்கள் தயார் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டப்பேரவை அருகே உள்ள இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.