ஆப்நகரம்

தனியாருக்கு சலுகை தருவதா?; மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

மின்துறையில் தனியாருக்கு சலுகை வழங்கப்பட்டதை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 21 Apr 2021, 12:27 pm
புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் பல்வேறான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மின் ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.


நாய்களிடம் சிக்கிய ஆந்தை; களம் இறங்கிய காக்கைகள்!

இந்நிலையில் அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் அனைத்து இணைப்பு சங்கங்களை ஒன்று திரட்டி மத்திய அரசை கண்டித்தும், மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட கோரியும் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

4 நாளில் ஒரே வீட்டில் 4 மரணம்!

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மின்துறை தனியார் மயத்தை செயல்படுத்த குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு எந்தவித போட்டியும் இல்லாமல் உரிமம் வழங்கியிருப்பதை கண்டித்தும், மின் வினியோகத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க கோரியும் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தினர் கோஷம் எழுப்பினர்.

அடுத்த செய்தி